எண்ணம் போல் வாழ்வு
பிரியா ஒரு சொற்பொழிவாளர். தன்முனைப்பு பட்டறைகளை நடத்துவதிலும், சமூக சேவைகளில் ஈடுபடுவதிலும் அவளுக்கு அளவில்லா ஆர்வம். இளையோர்களை, குறிப்பாக பெண்களுக்கென பல சலுகைகளையும் சேவைகளையும் வழங்குவதில் கொடை வள்ளல். அவளது கணவரின் ஆதரவும் அவளுக்கு பக்கபலமாக இருந்தது. முன்பு துவண்டிருந்தப்போது அவளுக்குப் பாடம் புகட்டிய அந்த சிவாதான் அவளுடைய கணவர். வாழ்க்கையில் சிறு சிறு விஷயத்துக்கெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக மனமுடைந்துப் போகக்கூடிய பிரியா இப்போது மற்றவர்களுக்கு ஆணிவேராக இருக்கிறாள். ஆச்சரியம்தான். இதன் பின்னணியில் மிகவும் சாதாரண விஷயம் ஒன்று இருந்தது. அனைவருக்கும் ஏதேதோ விஷயங்கள் பாடமாக அமைகின்றன, திருப்பு முனையை ஏற்படுத்துகின்றன, அளவில்லா தாக்கத்தைக் கொடுக்கின்றன. அவ்வகையிலே, பிரியாவுக்கு ஒரு சிறு விஷயம் அவள் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அவள் வாழ்க்கைச் சூழலையே மாற்றியமைத்தது. இப்போது இப்படி இருக்கும் பிரியா முன்பு…
யாரிடமும்
சரிவர பேசாதவள். முகம் கொடுத்து யாரையும் அழைக்கவும்
மாட்டாள். தனிமைதான் அவளுக்கு இனிமை. வீட்டை விட்டு வெளியே வரும் நேரம் சுமார் ஒரு
எட்டு மணி நேரம் மட்டுமே, அதாவது வேலைக்குச் செல்லும் நேரம். இதற்கான காரணம்…பிரியாவுக்கு
முகப்பரு இருப்பதுதான்.
அவள் வாழ்க்கையில் அது
ஒரு முட்டுக்கட்டையாக இருந்தது. பார்ப்பவர்கள் எல்லாரும், "ஏன் பிரியா முகமெல்லாம் இவ்வளவு முகப்பரு?, தூக்கம் பத்தலையா?" "ஏம்மா பிரியா, முகமெல்லாம் இப்படி ஆயிடுச்சு, முகத்துக்கு என்ன போடற?" என்று நச்சரிக்கும் போது, பிரியாவுக்கு ஏந்தான் இவங்கள
பார்க்கறோம்னு இருக்கும்! பல வருடங்கள் கழித்து அவளைப் பார்ப்பவர்கள் கூட, அவள் முகத்தைப் பற்றித்தான் நலம்
விசாரிப்பார்கள். அவ்வளவு ஏன், உடன்
வேலை செய்யும் சில நண்பர்கள், தினம்
தினம் அவள் முகப்பருக்களைக் கண்டு கிண்டலும் கேலியும் செய்வதுண்டு. இதனாலேயே
அவளாள் வேலையில் முழு ஈடுபாடு காட்ட இயலாமல் போகும். அம்மாவிடம் இதைப்பற்றி அவள்
சொல்லி நொந்துக்கொள்வாள். அம்மாவும், "நீ
துர்க்கையம்மன்கிட்ட நல்லா வேண்டிக்கோம்மா, கண்டிப்பா
உன் முகப்பரு எல்லாம் போயிடும்" என்று ஆறுதல் கூறுவார். இதனாலேயே வேலையைத்
தவிர வேறு இடங்களுக்கு வெளியில் செல்வதைத் தவிர்ப்பாள். எப்பொழுதும் முகத்தை
சோகமாக வைத்துக் கொள்வாள். கண்ணாடி முன்னாடியே அவளது பாதி நேரம் செலவழிந்து
விடும். இவ்வளவு ஏன்? சொந்த
அக்காளின் திருமணத்திற்கே ஒரு விருந்தினரைப் போல்தான் கலந்து கொண்டாள். அரைமணி
நேரம் அங்கு செலவழித்துவிட்டு வீடு திரும்பி விட்டாள். நாள்கள் கடக்க கடக்க, பிரியாவுக்கு தாழ்வு மனப்பான்மை
அதிகரித்துக் கொண்டே போனது. அவளை எதிர்மறை சிந்தனைகள் சூழ்ந்துக்கொண்டன. எங்கே
வெளியே சென்றாலும், "அய்யோ, இவங்க என் முகத்தைப் பார்த்து என்ன
நினைக்கப்போறாங்களோ, என்ன
கேட்கப்போறாங்களோ?" என்றெல்லாம்
எண்ணுவாள்.
சொல்லப்போனால், பிரியா ஓர் அழகான பெண்தான். வாளை போன்ற
கூர்மையான விழிகள், செந்நிற
கன்னங்கள் என அவள் ஒரு வித்தியாசமான அழகி. ஆனால் கண்திருஷ்டியைப் போல அவள் அழகைக் கெடுப்பது அந்த முகப்பருக்கள் தான். இதுவரை எத்தனையோ பாட்டி வைத்தியங்களையும், நவீன
சிகிச்சைகளையும் மேற்கொண்டும் அந்த பிரச்சனை மட்டும் தீரவே இல்லை பிரியாவுக்கு.
அதற்காக ஆயிரம் ஆயிரம் செலவளித்தும் பயனில்லை. இனி என்னதான் செய்வதென்று துவண்டு
போனாள் பிரியா. "என்னதான் சொல்லு பிரியா, நீ அழகாத்தா இருக்க, உன் முகப்பரு எல்லா இருந்தாலும் நீ
அழகுதான்" துவண்டுபோனவளை அவ்வப்போது தட்டியெழுப்ப அவள் தோழி லக்ஷ்மி
தூண்டுகோலாக இருப்பாள்.
வேலையிடத்திலும் பிரியா யாரிடமும் கலகலப்பாக பேசுவதில்லை. எப்போதுமே தன்னை
சோகமாக காட்டி கொள்வாள். எப்போதிலிருந்து அவளுக்கு இப்படி ஒரு மனப்பான்மை
வந்ததென்று யாராலும் கண்டறிய முடியவில்லை.
சில சமயங்களில், இவளுக்கேதாவது நோய் இருக்க கூடுமோ என்றெல்லாம் சகோதரிகள் எண்ணுவர். இதற்கெல்லாம் இடம் கொடுக்கும் அளவுக்கு நடந்துக் கொள்ளும் பிரியா நாளடைவில் மன உளைச்சலுக்கும் ஆளானாள். ஒரு நாள் அலுவலகத்தில், சிவாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. சக ஊழியர்கள் அவருடைய பிறந்த நாளை வெளியே உணவகத்துக்குச் சென்று கொண்டாடலாம் என்ற யோசனையை முன்வைத்தனர். அனைவரிடமும் ஆலோசனைக் கேட்டப்போது, சட்டென பிரியாவிடமிருந்து, “நான் வரல சிவா,என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு, எனக்கு நேரமாயிடுச்சு, நான் வீட்டுக்கு கிளம்பனும்…” சிவாவுக்கு பிரியாவின் போக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. “ஏன் பிரியா, இப்ப என்ன லேட் ஆயிடுச்சுன்னு இவ்வளவு சீக்கிரமா கிளம்பறீங்க? நானும் பார்க்கறேன், யார்கிட்டேயும் சரியா பேசறதில்ல, எங்கேயும் வரதுமில்ல, அப்படி யார் மேல என்ன கோபம் உங்களுக்கு? நாங்க ஏதாவது தவறு செஞ்சிட்டோமா?” “அய்யோ அதெல்லாம் இல்ல சிவா… நீங்க ஒன்னும் நினைச்சுக்காதீங்க, உங்க்கிட்ட எல்லாம் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல, நான் இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் கிளம்பனும், அதான்… வேற ஒன்னுமில்ல..”
சில சமயங்களில், இவளுக்கேதாவது நோய் இருக்க கூடுமோ என்றெல்லாம் சகோதரிகள் எண்ணுவர். இதற்கெல்லாம் இடம் கொடுக்கும் அளவுக்கு நடந்துக் கொள்ளும் பிரியா நாளடைவில் மன உளைச்சலுக்கும் ஆளானாள். ஒரு நாள் அலுவலகத்தில், சிவாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. சக ஊழியர்கள் அவருடைய பிறந்த நாளை வெளியே உணவகத்துக்குச் சென்று கொண்டாடலாம் என்ற யோசனையை முன்வைத்தனர். அனைவரிடமும் ஆலோசனைக் கேட்டப்போது, சட்டென பிரியாவிடமிருந்து, “நான் வரல சிவா,என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு, எனக்கு நேரமாயிடுச்சு, நான் வீட்டுக்கு கிளம்பனும்…” சிவாவுக்கு பிரியாவின் போக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. “ஏன் பிரியா, இப்ப என்ன லேட் ஆயிடுச்சுன்னு இவ்வளவு சீக்கிரமா கிளம்பறீங்க? நானும் பார்க்கறேன், யார்கிட்டேயும் சரியா பேசறதில்ல, எங்கேயும் வரதுமில்ல, அப்படி யார் மேல என்ன கோபம் உங்களுக்கு? நாங்க ஏதாவது தவறு செஞ்சிட்டோமா?” “அய்யோ அதெல்லாம் இல்ல சிவா… நீங்க ஒன்னும் நினைச்சுக்காதீங்க, உங்க்கிட்ட எல்லாம் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல, நான் இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் கிளம்பனும், அதான்… வேற ஒன்னுமில்ல..”
சிவாவுக்கு பிரியாவின் பதிலில் திருப்தியில்லை. கடந்த மூன்றாண்டுகளாகவே,
சிவாவுக்கு பிரியாவின் மேல் ஓர் அபிப்ராயம். ஆனால், அவளிடம் பேசும் வாய்ப்பு
சிவாவுக்கு அடிக்கடி கிடைப்பதில்லை. அதனாலோ என்னவோ, அவனுடைய காதல் இன்னும் மலராமல்
அறும்பாகவே இருந்தது.
பிரியாவுக்கு என்னதான்
பிரச்சனை என்று சிவா ஆழ்ந்து சிந்திக்கலானான். இதை எப்படி கண்டறிவது என்று
யோசித்தவன், முதலில் அவளுடைய நண்பனாக வேண்டும் என்று எண்ணினான். அவளை அணுக அதுவே
சரியான வழிமுறை என்றே தோன்றியது சிவாவுக்கு. ஒரு நண்பனாக இருந்து அவளுடைய
பிரச்சனையைத் தீர்க்க முடிந்தால் அதுவே போதும் என்று சிவா எண்ணினான். சில
நாள்களுக்குப் பிறகு, சில சந்தர்ப்பங்களுக்குப் பிறகு, சிவாவின் இலக்கு
கைக்கூடியது. இப்போது இருவரும் நண்பர்களாயினர். வேலையிடத்தில் சிவாவுடன்
மட்டும்தான் பிரியா சகஜமாக பேசுவாள். இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் பிரச்சனைகளைப்
பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். பிரியாவின் ஒரே
பிரச்சனையை சிவாவிடம் அவள் சொன்னாள். சிவாவுக்கு பிரியா மீதுள்ள மரியாதை தலைகால் தெரியாமல் காணாமல் போனது.
"என்ன சொல்றீங்க பிரியா? முகப்பரு
இருக்கறதெல்லாம் ஒரு பிரச்சனையா? சிறுபிள்ளைத்தனமா
இருக்கு பிரியா.. இவ்வளவு நாள் இதனாலதான் சோகமா இருந்தீங்களா? உங்க வாழ்க்கையில பல சந்தோஷமான
நொடிகளை இழந்துட்டீங்க பிரியா… உங்களுக்கு இப்படியொரு
சின்ன விஷயம்தான் முட்டுக்கட்டையா இருக்குன்னு நினைக்கும்போது ரொம்ப வருத்தமா
இருக்கு" "ஆப்ரிக்காவுள்ளே உள்ள குழந்தைகள பார்த்திருக்கிங்களா?
அந்த குழந்தைகளுக்கெல்லாம் ஒரு வேளை சோறு கிடைக்கறதே கஷ்டம்.... அதுங்க வாழல? அத விடுங்க பிரியா... எவ்வளவு பேர் உடல்லெ குறையோட பிறக்கறாங்க, ஏன் எத்தனைப் பேருக்கு கண் தெரியாம, காது கேட்காமே, ஏன் முகமே சரியா இல்லாமெ இருக்காங்க? நீங்க, இவ்வளவு அழகா பிறந்தும், எந்த குறையும் இல்லாம இருந்தும், இந்த சாதாரண முகப்பருக்கா இவ்வளவு கவலப் படற? பெரியவங்க சொன்னதெல்லாம் உண்மைதான் பிரியா. எப்போதுமே, இருப்பத வச்சு சந்தோஷப்படறவங்க ரொம்ப குறைவு, எப்போதுமே, நமக்கு இது கிடைச்சிருக்குன்னு யாரும் நன்றியுணர்வோடையே இருக்கறதில்ல, இதெல்லாம் உங்களுகெங்க தெரிய போகுது!" என்று சொன்னவர், தன் பையிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து பிரியாவிடம் நீட்டினார். "இவ தான், நான் எப்பொதுமே சொல்வேனே, என் அக்கா தேவி. எப்படி இருக்கா பார்த்தியா? இவ என்ன பாவம் செஞ்சான்னு கடவுள் இவளுக்கு ஒன்றரைக் கண்ண கொடுத்தான்னு தெரியல, அதை காரணங்காட்டி இவளோட கல்யாணம் தள்ளிப்போகுது. இத நினைச்சு அவள் அழுதுக்கிட்டு இருந்திருந்தா, இந்நேரம் ஒரு கம்பெனி முதலாளியாயிருக்க முடியுமா? என்ன பிரியா நீங்க? சின்ன குழந்தையா நீங்க இப்படி மத்தவங்க எடுத்து சொன்ற அளவுக்கு?" சிவாவின் பேச்சு, பிரியாவுக்கு இரண்டு கன்னங்களிலும் பலார் பலார் என்று அறைந்தது போல் இருந்தது. சே, இந்த சாதாரண முகப்பரு பிரச்சனைக்காகவா இவ்வளவு நாள் நான் சோகமா இருந்தேன்? என்று மனத்துக்குள் முணுமுணுத்தாள் பிரியா. ஏதும் சொல்வதறியாது அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் பிரியா. மறுநாள் சிவாவின் முகத்தைப் பார்ப்பதற்கு தைரியம் இல்லாதவளாய் மௌனமாய் இருந்தாள். சிவா பிரியாவிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டான். இந்த விஷயத்துக்கெல்லாம் வருத்தப்படுவாங்களா? என்று ஆச்சரியப்பட்டான் சிவா. அவங்க அவங்க வேதனை, அவங்க அவங்களுக்குத்தான் தெரியும் என்று மனதை சாந்தப்படுத்த முயற்சித்தாலும், இந்த சின்ன விஷயத்தைப் பற்றி கவலைப் பட்டு வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய மகிழ்ச்சியான தருணங்களை இழக்க நேரூம் அளவுக்கு, அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே, என்றே அவன் மனம் சிந்திக்க தூண்டியது.
அந்த குழந்தைகளுக்கெல்லாம் ஒரு வேளை சோறு கிடைக்கறதே கஷ்டம்.... அதுங்க வாழல? அத விடுங்க பிரியா... எவ்வளவு பேர் உடல்லெ குறையோட பிறக்கறாங்க, ஏன் எத்தனைப் பேருக்கு கண் தெரியாம, காது கேட்காமே, ஏன் முகமே சரியா இல்லாமெ இருக்காங்க? நீங்க, இவ்வளவு அழகா பிறந்தும், எந்த குறையும் இல்லாம இருந்தும், இந்த சாதாரண முகப்பருக்கா இவ்வளவு கவலப் படற? பெரியவங்க சொன்னதெல்லாம் உண்மைதான் பிரியா. எப்போதுமே, இருப்பத வச்சு சந்தோஷப்படறவங்க ரொம்ப குறைவு, எப்போதுமே, நமக்கு இது கிடைச்சிருக்குன்னு யாரும் நன்றியுணர்வோடையே இருக்கறதில்ல, இதெல்லாம் உங்களுகெங்க தெரிய போகுது!" என்று சொன்னவர், தன் பையிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து பிரியாவிடம் நீட்டினார். "இவ தான், நான் எப்பொதுமே சொல்வேனே, என் அக்கா தேவி. எப்படி இருக்கா பார்த்தியா? இவ என்ன பாவம் செஞ்சான்னு கடவுள் இவளுக்கு ஒன்றரைக் கண்ண கொடுத்தான்னு தெரியல, அதை காரணங்காட்டி இவளோட கல்யாணம் தள்ளிப்போகுது. இத நினைச்சு அவள் அழுதுக்கிட்டு இருந்திருந்தா, இந்நேரம் ஒரு கம்பெனி முதலாளியாயிருக்க முடியுமா? என்ன பிரியா நீங்க? சின்ன குழந்தையா நீங்க இப்படி மத்தவங்க எடுத்து சொன்ற அளவுக்கு?" சிவாவின் பேச்சு, பிரியாவுக்கு இரண்டு கன்னங்களிலும் பலார் பலார் என்று அறைந்தது போல் இருந்தது. சே, இந்த சாதாரண முகப்பரு பிரச்சனைக்காகவா இவ்வளவு நாள் நான் சோகமா இருந்தேன்? என்று மனத்துக்குள் முணுமுணுத்தாள் பிரியா. ஏதும் சொல்வதறியாது அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் பிரியா. மறுநாள் சிவாவின் முகத்தைப் பார்ப்பதற்கு தைரியம் இல்லாதவளாய் மௌனமாய் இருந்தாள். சிவா பிரியாவிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டான். இந்த விஷயத்துக்கெல்லாம் வருத்தப்படுவாங்களா? என்று ஆச்சரியப்பட்டான் சிவா. அவங்க அவங்க வேதனை, அவங்க அவங்களுக்குத்தான் தெரியும் என்று மனதை சாந்தப்படுத்த முயற்சித்தாலும், இந்த சின்ன விஷயத்தைப் பற்றி கவலைப் பட்டு வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய மகிழ்ச்சியான தருணங்களை இழக்க நேரூம் அளவுக்கு, அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே, என்றே அவன் மனம் சிந்திக்க தூண்டியது.
ஒரு
நாள், வீட்டுக்கு திரும்பும்
வழியில் ஒரு பெண்ணைப் பார்த்தாள் பிரியா.
அவளது முகம் எரித்திராவகம் பட்டு வெந்துப் போயிருந்தது. பிரியா அவளைப் பார்க்கத்
தூண்டியது அந்த பெண்ணின் கலகலப்பான சிரிப்புதான். நண்பர்களுடன் சகஜமாக பேசி
சிரித்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். அவளை சற்று நேரம் விழியசையாமல்
பார்த்துவிட்டு வீடு வந்து சேர்ந்தாள் பிரியா. முகமே பாழாய் போன அந்தப் பெண்ணின்
மனதுக்குள் எத்தனை சந்தோஷங்கள்? அவள்
மனதில் சந்தோஷம் புழங்கி கிடப்பதால்தானே அது சிரிப்பின் வழி வெளிப்படுகிறது? முகமே எரிந்துப் போன பிறகும் அதை
துச்சமென கருதி, அந்த
பெண் இயல்பு வாழ்க்கையில் ஈடுப்பட்டுள்ளதை நினைத்து பிரியா மெய்சிலிர்த்தாள்.
"சிவா சொன்னது சரிதான், அது
குறை, இது குறைன்னு நினைச்சா, எல்லாமே குறையாத்தான் தெரியும்.
அதுலேயும், எனக்கு
என்ன குறை இப்போ? இந்த
சாதாரண முகப்பருக்களா எனக்கு குறை? இவ்வளவு
முட்டாளாகவா இவ்வளவு நாள் வாழ்ந்திருக்கேன்?" தன்னைத் தானே பிரியா கேள்வி கேட்டுக் கொண்டாள். அவளை
நினைத்து அவளுக்கே சிரிப்பு வந்தது. எல்லாமே நம் எண்ணத்தைப் பொருத்துத்தான்
அமைகிறது. ஒருமுறை தோழி லக்ஷ்மி சொன்னாள், "சில
பேருக்கு முகத்துல பரு இருந்தால்தான் அழகு" என்று.. அது இப்போது பிரியாவின்
நினைவுக்கு வந்து அவளுக்குப் புன்னகையைத் தந்தது. தன் அறையில் உள்ள முகம்
பார்க்கும் கண்ணாடிக்கு விரைந்தாள். கன்னங்கள் இரண்டிலும் கையை வைத்து தன் முகத்தை
ரசித்தாள். "நான் அழகாத்தான் இருக்கேன், ஏன்
இவ்வளவு நாள் இந்த அழகு நம்ம கண்ணுக்குத் தெரியல" என புன்முறுவல் பூத்தாள்...
மறுநாள் அலுவலகத்துக்கு வந்தவள் நேராக சிவாவின் அறைக்குச் சென்று, “சிவா,
இன்று எனக்கு பிறந்த நாள்,வீது எனக்கு மறு பிறவி. இந்த நாளை
நான் கொண்டாடியே ஆக வேண்டும், வெளியே சென்று கொண்டாடலாமா?” என்று கேட்டாள்.
சிவாவுக்கு ஆச்சரியம் தலை தூக்கியது. “பிரியாவா வெளியே என்னை அழைப்பது?” என்று
கிண்டல் செய்தான். போகும் வழி நெடுகில், சிவா கூறியதாவது, “பிரியா, நான்
என்னைக்குமே உன்னைப் பார்க்கும்போது உன் அழகான கண்களை மட்டுமே பார்க்கிறேன். உன்னை
எனக்கு பிடித்திருப்பதால், உன் குறைகள் எனக்கு தென்படவில்லை, அது போக உன்
முகப்பருக்களை நான் குறையாகவே முதலில் நினைக்கவில்லை. அதுவும் ஓர் அழகு என்றே
நினைத்துக் கொள்வேன். நம் எண்னப்படித்தானே நம் வாழ்வு… நாம் என்ன நினைக்கறோமோ, அப்படித்தானே
நாம் உருவெடுபோம்…” என்றான். சிவாவின் அந்த தத்துவ மொழி பிரியாவின் மனதின் ஆழமாய்
பதிந்தன. நல்ல வேளையாக இருக்கும் மிச்ச காலத்தையும் சோகத்திலேயே மூழ்கடிக்காமல்
அன்று விழித்துக் கொண்டாள் பிரியா.
பல மாதங்களுக்கு
பிறகு அவளது முகம் பார்க்கும் கண்ணாடி, ஓர் அழகிய முகத்தைக் காட்டுவதைக் கூர்ந்து கவனித்தாள்
பிரியா… முகப்பரு இருந்தும் இல்லாத அவளது அழகிய முகத்தைத்தான் அந்தக் கண்ணாடி காட்டியது!
“இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லம் துவண்டு போனா வாழ்க்கையிலெ எப்படி
எதிர்நீச்சல் போடறது? வாழ்க்கையிலெ சந்திக்கறதுக்கு எவ்வளவோ இருக்கு. என்ன
மாதிரியே எத்தன பேர் போகும் இடம் தெரியாம துவண்டு போய் கிடப்பாங்க?
இவங்களுக்கெல்லாம் சிவா மாதிரி யாரும் வரலைன்னா என்ன ஆகும்? இதுக்கெல்லம் ஒரு
முடிவு கட்டணும்…” என்று அன்று பிரியா எடுத்த முடிவுதான் இன்று அவளை ஒரு
தன்முனைப்பு பேச்சாளராக்கியது. எத்தனையோ களைகளை, இன்று களைந்தெறிந்துக்
கொண்டிருக்கிறாள் அந்த பிரியமான பிரியா.
அருமை
ReplyDelete