Friday, 13 September 2013

கருத்தம்மா...


தெய்வம் நின்றுக் கொல்லும் நின்றுக் கொல்லும் என எத்தனை 

காலம்தான் காத்திருப்பது? இப்படியே விட்டால், பெண் பிள்ளைகளின் 

கதி? இந்தியாவிலும், இன்னும் சில அரபு நாடுகளிலும் இன்னும் இந்த 

அவல நிலை நீடித்து கொண்டுதான் இருக்கிறது.



8 வயது சிறுமியை தன்வசப்படுத்த நினைத்த அந்த 40 வயது 

கிழவனுக்கு கேடு என்றே சொல்ல வேண்டும். இன்னும் பல 'நல்ல 

வார்த்தைகளை'  அவனுக்காக உபயோகப்படுத்த வேண்டுமென்றே 

உள்ளம் துடிக்கிறது. 


அவளை வளர்த்து ஆளாக்கிய அந்த பெற்றோருக்கு கூடவா 

அறிவில்லை. 8 வயது சிறுமிக்கு தகுந்த இடம் பள்ளியறை இல்லை, 

பள்ளிக்கூடம்தான் என்று கூடவா அவர்கள் அறிவிற்கு எட்டவில்லை? 

அதுவும் உலகிலேயே மிகச் "சிறந்த அந்த தந்தையார்", தன் மகளை 

மிரட்டி மணமேடைக்கு அனுப்பியிருக்கிறார்... 


சில பெற்றோர்கள், தம் பெண்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க 

தேவைப்படும் செலவுகளைக் குறைத்துக் கொள்வதற்காக இப்படி, 

எவன் வருகிறானோ அவனுக்கு தங்கள் சின்னஞ்சிறு பிள்ளைகளை 

கட்டி வைத்துவிடுகிறார்கள். திருவிழா எங்கு நடந்தாலும், ஆட்டைப் 

பலிக்கொடுத்து விடுவது போல! அவ்வளவு கஷ்டப்படுகின்றவர்கள் 

பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள கூடாதல்லவா? ஆண் பிள்ளை 

பிறந்தால் ஆனந்தப்படுவதும், பெண் பிள்ளை பிறந்தால் 

துக்கப்படுவதும், இன்னும் சில இடங்களில் பின்பற்றப்பட்டு வருவது 

வேதனையளிக்கிறது... 




பெண்களை சூறையாடி அவலப்படுத்துகிறார்கள்; சிறுமிகளைக் கூட 

விட்டுவைப்பதில்லை இந்த காலத்து 'மிருகங்கள்'!

எவ்வளவோ, என்னனவோ சாதித்திருக்கக்கூடிய ஒரு பெண் 

பிள்ளையை ஒரு துச்ச காரணத்தினால் இழந்ததற்காக அந்த 

பெற்றோர்களும், உடன் இருந்த அறிவற்றவர்களும், நினைத்து 

வெட்கப்பட வேண்டும், வேதனை பட வேண்டும். மனித நேயமற்ற 

மிருகங்களைத் திருத்த அந்த கடவுள் சீக்கிரம் பூமிக்கு படையெடுக்க 

வேண்டும். இல்லையேல், உலகில், பெண் இனம் சீக்கிரமே 

அழிந்துவிடும்!



மனம் ரணமாய் கனக்கின்றது! 


No comments:

Post a Comment